சோயா மட்டர் மசாலா
தேவையான பொருட்கள்:
தேவையான பொருட்கள்:
- சோயா - 20
- பச்சைப் பட்டாணி - 25 கிராம்
- தக்காளி - 1
- மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
- மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
- சோயா சாஸ் - 1/2 தேக்கரண்டி
- சீரகம் - 1/2 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் - 1
- தேங்காய்ப்பால் - 100 ml
- கொத்தமல்லித் தழை - சிறிதளவு
- எண்ணெய் - 5 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து சோயா-ஐ அதில் போட்டு மூன்று நிமிடம் கழித்து வெளியே எடுத்து நீரை நன்கு பிழிந்து எடுத்து வைக்கவும்.
2. சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
3. தக்காளியை மிக்ஸியில் போட்டு பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.
4. கடாயில் எண்ணெய் விட்டு சோயா, பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி எடுத்து வைக்கவும்.
5. அதே கடாயில் சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து தக்காளி பேஸ்ட் சேர்த்து கிளறவும்.
6. மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம்மசாலா, மல்லித்தூள் சேர்த்து 5 நிமிடம் கிளறி, வதக்கி வைத்த சோயா, பட்டாணி உப்பு சேர்த்து மூடிபோட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்.
7. பின்னர் அதனுடன் தேங்காய்ப்பால் மற்றும் சோயா சாஸ் சேர்த்துக் கிளறவும்.
8. நன்கு கொதித்து கெட்டியானவுடன் இறக்கி கொத்தமல்லித்தழை தூவவும்.
சுவையான சோயா மட்டர் மசாலா தயார்...
0 comments:
Post a Comment